Posts

Showing posts from March, 2023

நீதிக்கட்சி அரசும் அது சந்தித்த மருத்துவக் கல்வி சவால்களும்

Image
பகுதி 1: மருத்துவமும் சமஸ்கிருதமும்.   பகுதி 2:  மருத்துவத்தில் செம்மொழியும் வட்டார மொழிகளும். 1919 ல் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை தொடர்ந்து , நவம்பர் 1920 ல் மாகாண அரசமைத்த நீதிக்கட்சி , பல்வேறு சவால்களை சந்தித்தது. இருந்தபோதும் அது முன்னெடுத்த பல நடவடிக்கைகளின் தாக்கம் இன்றும் தொடர்ந்து , ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பது அதன் சிறப்புக்கு சான்றாகும்.   ஆனால் , ஆட்சி செய்தகாலங்களில் அது சந்தித்த   சவால்கள் வெளியில் இருந்து மட்டும் வரவில்லை. அவர்களுக்குள்ளேயே இருந்த முரண்களும் புதிய பிரச்சனைகளுக்கு காரணமாகின.   மருத்துவ துறையைப் பொறுத்தவரை மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் , பொது மருத்துவ சேவையை மாகாண அரசின் நேரடிப் பொறுப்புக்கு கொண்டுவந்தது. மருத்துவ கல்வியும் , மருத்துவ வசதியும் , மாகாண அரசின் அதிகாரத்துக்குள் கொண்டுவந்ததுடன் , மருத்துவ கல்லூரிகளும் , புதிய பாடத்திட்டங்களும் , பல புதிய மருத்துவமனைகளும் மலர அது வழிவகுத்தது.   அதே சமயம் , ஒத்துழையாமை இயக்கமும் , சுதேசி இயக்கமும் நாடு முழுவதும் பேரலையை ஏற்படுத்திவந்தன.   அதற்கு , மதராஸ் மாகாணமும்