Posts

Showing posts with the label அரசியல்

சமூகத்தின் மனப்பிறழ்வு

Image
  சிறுவயதில் எனக்கு இரவில் படுக்கையை நனைத்துவிடும் பழக்கம் இருந்தது. குறிப்பாக பயம் தரும் படங்களைப் பார்த்த நாட்களில்.  அப்போது நான் பார்த்து பயந்த ஒரு கருப்பு வெள்ளை ஆங்கிலப்  படம் ஒன்று சமீபத்தில் ஞாபகத்தில் வந்ததது. அதில் மிக நார்மலாக இருக்கும் மனிதர்கள் திடீர் என்று உணர்வு தப்பி என்ன செய்கின்றோம் என்று தெரியாமல், கொலை செய்யத் தூண்டப்படுவார்கள். அந்த சம்பவம் நடந்த பின் அவர்களுக்கு அதைப்பற்றி எந்தவொரு  ஞாபகமும் இருக்காது. அவர்கள் அப்படி நடப்பதற்கு ஒரு ஹிப்னாட்டிசம் தெரிந்த வில்லன் தான் காரணம் என்று பிறகு தெரிய வரும். அவன் கொலைச்  செயலை நிகழ்த்த வேண்டிய ஆட்களை ஹிப்னாட்டிஸத்தில் ஆழ்த்தி, அவர்கள்  ஆழ்மனதில் கொலைக்கான உத்தரவை பதிய வைத்துவிடுவான்.  பிறகு, வேறு ஒரு தருணத்தில் அந்த உத்தரவை தூண்ட ஒரு சமிக்ஞையை கொடுத்து அவர்களை செயல்பட வைத்திருப்பான். ஒவ்வொருவருக்கும் வேறு வேறு சமிக்ஞைகள். இது ஒரு மர்மக் கதை என்றாலும், நம் நிகழ் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் இதற்கு சற்றும் குறைந்தவை அல்ல. என்ன, அந்த ஆழ்மன உத்தரவுகள், ஏற்கனவே இனம், மதம், மதம், மொழி என்று ஆழ்மனத்தில் வெறுப்பெனும் வேர் கொண்டு

மருத்துவமும் சமஸ்கிருதமும்

Image
“ உச்ச அதிகாரத்தின் அடையாளமே அது ஒளிந்திருப்பது தான் ; உச்சகட்ட போராட்டமே , அதன் வரலாற்று வேர்களை வெளிப்படையாக அம்பலப்படுத்துவது தான். ”  “ மிஷேல்- ரோல்ப் டூயோ ,  வரலாற்றை ஊமையாக்குதல் என்ற தனது நூலில் ”   கி. ஆ. பெ. விசுவநாதம் தனது “ எனது நண்பர்கள் “ என்ற நூலில் , ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தின் சாதனைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது , " டாக்டர் பட்டத்துக்கு விண்ணப்பம் போடுகிறவர்கள் , சமஸ்கிருதம் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கொடுமையை அழித்து ஒழித்தது " என்று கூறிய ஒரு வரி தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்து வருகிறது.   இந்த ஒரு வரியை வைத்து இருதரப்புகளும் தொடர்ந்து பந்தாடுகின்றன.   சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு   விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது என்று திராவிடக் கொள்கையாளர்கள் மற்றும் தமிழ் தேசியத் தரப்பும் , இல்லை , அது ஆதாரமற்ற பொய் என்று சம்ஸ்கிருத ஆதரவாளர்கள் தரப்பும்   தொடர்ந்து பொது வெளிகளில் உறுமி வருகின்றனர். இதில் எவ்வளவு உண்மை உள்ளது ?   அலோபதி மருத்துவத்தைப் பொறுத்தவரை அதன் வேர்ச் சொற்கள் பல லத்தீன் மொழியில் இருக்கும்.

காந்தியின் பாதை

Image
காந்தியின் அடையாளங்கள், கொள்கைகள், குறியீடுகள் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று, தவறாகவும், குறுகிய நோக்கங்களுடனும் சித்தரிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அதனால் இன்றைய காலகட்டத்தில் அவரைப் பற்றிய உருவகம் மீளக் காட்சிப்படுத்துதல் அவசியமாகிறது. அவரைப் பற்றிய நிகழ்வுகளின் வழியே அவரைக் கண்டடைவதும், அதன் வழியாக அவரைப்பற்றிய புரிதலை அடைவதும் இன்றைய தேவை. அவ்வகையில் இந்தப்புத்தகம் ஒரு குறிப்பிட்ட அளவில் ஆவணமாகவே கருதலாம். அனுபவக் குறிப்பாக ஆரம்பிக்கும் இந்நூல், சில நேரங்களில், மூன்றாம் நபரின் பங்களிப்பை, செவிவழி சம்பவங்களாகக் கூறினாலும், பெரும்பாலும் அண்ணலின் கூடவே பயணித்த காகாவின் அனுபவங்களின் ஊடே செல்வதால், சம்பவங்களின் உண்மைத்தன்மைக்கு பெரிதும் சேதம் நேராமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகம் என்ற வகையில், நீதிக்கதைகள் (fables) போல் இருந்தாலும், அந்த சிறு சம்பவங்களின் வழியே அவரின் ஆளுமையும், அது உருவாகிய வழியையும் தெள்ளத்தெளிவாக படம் பிடிக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், கிலாபத் கிளர்ச்சி ஒரு முக்கியமான திருப்பு முனையாகும். அதன் தொடர்ச்சியாக, வைசிராயுடன் நிகழ்ந்த ப

ஆமைக்கறியும், ஆங்கில புத்தகமும்…

Image
எத்தனையோ நல்ல புத்தகங்களைப் பற்றி இங்கே பதிந்து வந்திருக்கிறேன். ஆனால்  நான் இன்று குறிப்பிடுவது அதுபோல் ஒன்றல்ல. பொதுவாக நல்ல புத்தகங்களையும், அதன் வாசிப்பு அனுபவத்தையும் மட்டுமே குறிப்பிடுவது என்ற உறுதியை ஆட்டிப்பார்க்கவும் ஒரு தகுதி வேண்டும் அல்லவா? அப்படி ஒரு ‘ தகுதி ‘ வாய்ந்த புத்தகத்தையும், அதன் எழுத்தாளரையும் பற்றித்தான் இன்று நான் குறிப்பிட விரும்புகிறேன். வழக்கமாக புத்தக அங்காடி எங்கிருந்தாலும் உடனே ஆர்வத்துடன் அங்கு சென்று புத்தகங்களை நோட்டமிட்டு, அவற்றில் சில புத்தகங்களை கையில் எடுத்து அவற்றின் சில பக்கங்களை ஒரு திட்டமான நோக்கம் ஏதும்  இல்லாமல்,  படித்து பார்த்து விட்டு அதை வாங்கும் முடிவை எடுப்பது வழக்கம். அப்படிப் படித்து பார்த்து புத்தகங்களை தேர்ந்தெடுப்பதே ஒரு பேரானந்தம் என்பதால், வேறு நாடுகளுக்கு செல்லும் போதும் கூட, அங்கே சில தங்கும் விடுதிகளில் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களை புரட்டி, சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கே தங்கியிருக்கும் போதே படித்து முடிக்க முயல்வேன். இல்லை என்றால் குறித்து வைத்துக்கொண்டு ஊர் வந்ததும் அதை வாங்கிவிடுவேன்.  மைசூரில் ஒரு பழம் பெரும

வில்லங்க விளையாட்டுக்கள்

Image
  விவசாயிகளின் போராட்டத்தின் முடிவில், மூக்கில் வழியும் ரத்தத்தை துடைத்தபடி, அடுத்த அடக்குமுறைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது இந்துத்துவ தரப்பு. தொடர்ந்து பலவகையிலும், விவசாயிகளின்  மீது வரலாறு காணாத அடக்குமுறை, பொய்ப்பிரச்சாரம் என்று மாறிமாறி கட்டவிழ்த்தும் மண்ணைக்கவ்விய நிலையில்,  அது தந்த  அதிர்ச்சியில் இருந்து எழுந்து அடுத்த அடக்குமுறைக்கு அது  தயாராகிக் கொண்டிருக்கிறது. அருஞ்சொல்லில் வெளிவந்த அருணா ராயின் கட்டுரையில் குறிப்பிட்டது போல், சமீபத்தில் ஹைதராபாதில் உள்ள தேசிய காவல் துறை அகாடமியின் பயிற்சி முடிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் தன உரையில் சமூக செயல்பாட்டாளர்கள் மீது “நான்காம் தலைமுறைப் போர்" என்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவு இன்னும் சிலநாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம் . சிலவருடங்களாகவே வெகுஜன வாழ்விலும், சமூக செயல்பாட்டாளர்களின்  மீதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அடக்குமுறையும், வரலாறு காணாத பொய்ப்  பிரச்சாரங்களும் ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்துள்ளது. நண்பர் அரவிந்தன் சிலநாட்களுக்கு முன் டிரம்ப்பின் முன்னெடுப்புகளும், அரசியல் செயற்பாடுகளையு