Posts

Showing posts with the label மொழிபெயர்ப்பு

கவனமும் புரிதலும்

Image
ஒரு அதிகாலை புதிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் மைசூர் பயணம். இடையில் சிற்றுண்டிக்காக, பெங்களூரின் பெயர்பெற்ற சைவ உணவகத்தின் கிளையில் நிறுத்தினோம். அது பாரம்பரிய பொம்மைகளுக்குப் பெயர்பெற்ற ஊருக்கருகில் உள்ளது என்றபோதும், அங்கே வருபவர்கள் அனைவரும் அந்த நெடுஞ்சாலை வழி செல்லும் பயணிகளாகத்தான் இருப்பர். உணவை சொல்லிவிட்டு, காத்திருக்கும் போது அருகில் உள்ள மேசைகளில் தென்படும் முகங்களை காண்பதும், அதைவிட அவர்கள் உண்ணும் உணவுத் தட்டை கவனிப்பதும் மிக சுவாரசியம். அதையும் மீறி அது, காத்திருக்கும் நம் வயிற்றுக்கும் சற்று முன்னோட்டமாகவும் இருக்கும் என்பது ஐதீக நம்பிக்கை. அப்படி நாங்கள் உணவுக்காக காத்திருந்த போது, அருகில் ஒரு வயதான பெண்மணி பளிச்சென்று கண்ணில்பட்டார். பார்த்தவுடன் பெங்களூரின் படித்த Progressive என்று பறையடித்துக்கொள்ளும் தோற்றம் மற்றும் உடை. பக்கத்தில் தன்னோடு வந்த பெண்மணியோடு சிரித்துப் பேசிக்கொண்டே உணவுண்டு கொண்டிருந்தார். உணவு உண்டபின் உணவகத்தின் பின்னே இருந்த பொது கழிப்பகத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. முதலில் நானும் எங்கள் செல்வனும் சென்றுவிட்டு பைகளை ஏந்திக்கொண்டு என் மனைவி வருவதற்கு...

புலிகளின் காலங்கள்

Image
ஒரு அடர் கானகத்தில் இருந்து இப்போது தான் மீண்டு வந்திருக்கிறேன். இதுவரை நான் பார்த்தேயிராத தாய்லாந்தின் கிழக்குப் பகுதி காட்டிலிருந்து தப்பி வெளியே வந்திருக்கிறேன். எப்படி நேர்ந்தது இது? ஒரு தொழில் முறை பயணமாக சென்றபோது கண்டெடுத்த ஒரு புத்தகத்திலிருந்து தான் இந்த நிகழ்ந்திருக்க வேண்டும். வழக்கமாக செய்வது போலவே இந்த முறையும் அந்த ஊரில் உள்ள ஒரு புத்தகக்கடைக்கு சென்று அங்கே என்ன புத்தகம் இப்போது மிகவும் வாசிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது என்று அறியும் ஆவலோடு சென்றேன். அப்போது அங்கிருந்த கடைச் சிப்பந்தி எனக்காக தேர்ந்தெடுத்துக் கொடுத்த புத்தகம் தான் இது. இதை எழுதியவர் சனே சங்சுக் (Saneh Sangsuk) எனப்படும் ஒரு தாய்லாந்து எழுத்தாளர். தாய்லந்தின் குறிப்பிடத்தக்க முன்னணி புனைவு எழுத்தாளர் இவர். அந்த நிலத்தின் முக்கிய கதை சொல்லியான சனே, அவர்களின் கலாச்சாரத்தையும் சரித்திரத்தையும் குறியீடாக வைத்து தன் எழுத்துகளில் மாயவித்தையை நிகழ்த்திக் காட்டும் வித்தைக்காரர். தற்கால தாய் இலக்கிய பரப்பிலும், உலக இலக்கிய பரப்பிலும் பல விருதுகளைப் பெற்றவர். ஆனாலும் அவருடைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் வருவது இ...

தொலைந்து போன வார்த்தைகள்

Image
  ஒரு கடல் இரு நிலம், ஆங்கிலத்தில் By the sea என்று அப்துல்ரஸாக் குர்னா எழுதிய அழகிய நாவல். குர்னாவை பற்றி புதிதாக சொல்ல ஏதும் இல்லை.ஏற்கனவே அவருடைய இரு நூல்களை வாசித்த அனுபவம் மிக அருமை. அவர் நோபல் பரிசு பெற்றதற்கு முன்பு வெளிவந்த நாவல் இது. அகதியாக குடியேறிய அவர் மனதுக்கு மிக நெருக்கமானதாக இந்த நூல் இருந்திருக்கவேண்டும். நோபல் பரிசின் இணைய காணொளியில் அவர் தேர்ந்தெடுத்து வாசித்தது இந்த புத்தகத்தின் பக்கங்களைத்தான். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் சசிகலா பாபு. இவருடைய பத்தாவது மொழி பெயர்ப்பு இது. அந்த அனுபவம் இதில் தெரிகிறது. இவர் மொழிபெயர்த்த ஒரிய எழுத்தாளர் கோபிநாத் மோகந்தியின் மொழிபெயர்ப்பான சோற்றுப்பாடு என் வாசிப்பு பட்டியலில் உள்ளது.  “மேஜையைச் சுற்றி அமர்ந்து நாங்கள் தேநீர் பருகினோம். ஹாம் துண்டுகளைக் கைகாட்டி வேண்டாமென நான் சிலியாவிடம் தலையாட்டினேன். “பன்றி” காதுவரை இளித்துக்கொண்டுச் சொன்னான் இப்ராகிம், அந்த கேலியை ஜார்ஜியிடமும் சொல்லத் திரும்பினான். “முஸ்லிம் இல்லையா, பன்றியிறைச்சி சாப்பிட மாட்டார், மூத்திரத்தில் சாராயவாடை இருக்காது. சுத்தம் சுத்தம் சுத்தம், கழுவு கழுவு கழ...

சொர்க்கத்தின் பறவைகள் - வாழ்வின் ஓட்டம்

Image
  நம் தலைமுறை போல் கால மாற்றத்தை மிகப்பெரிய அளவில் நேரடியாக உணர்ந்த தலைமுறை இருந்திருக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு நடுவில் பாந்தமாக வைத்திருக்கும் ஒரு பெரிய பெட்டியை பதவிசாக அதன் மெல்லிய உறை விலக்கி, அதன் உருளைகளை மிக கவனமாக திருப்பி, சிலோனிலோ, சென்னையிலோ இருந்து ஒலிக்கும் பாடல்களை நிம்மதிப் பெருமூச்சு எழ கேட்பதையும், கனமான கருப்பு வஸ்த்துவை கையில் எடுத்து மெதுவாக எண்களை தேடிச் சுழற்றி, குரல் வந்ததும் பய பக்தியோடு வெளியூரில் இருக்கும் மாமாவின் ஊரையும் எண்ணையும் சொல்லி, காத்திருந்து ஓடிவந்து பேசுவதையும், நாமே மறந்திருக்கும் போது, அடுத்த தலைமுறை அதை நாம் சொல்லும்போது எப்படிப் புரிந்து கொள்ளும்? இதில், நமக்குப் பரிச்சயமே இல்லாத ஒரு நிலப்பரப்பில், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய அதன் சமூக அமைப்பு, அந்த சமூகங்களின் தொன்மங்கள், வாழ்வியல் ஆகியவற்றை அந்த சமூகத்தில் இருந்து வந்த ஒருவரே சொல்லுவதை நமக்கு தமிழில் கடத்துவது என்பது எவ்வளவு பெரிய முயற்சி? அப்படி ஒரு முயற்சியைத்தான், லதா அருணாச்சலம் அப்துல்ரஸாக் குர்னாவின் “சொர்க்கத்தின் பறவைகளில்” செய்திருக்கிறார்...

புயலுக்குப் பின்

Image
மலரும் மலரும் என்று அதற்காக உடல் வருத்தி , நிலத்தை செம்மைப் படுத்தி, விதைத்து, நீரூற்றி, காத்து, காத்திருந்த வலி முழுதும்,  பூவாகி, கனியாகி சிறக்கும் கணத்தில் மனம் பூத்து மகிழ்வது விதைத்தவர் இயல்பு. அந்த கணத்தில் அவன் தொழிலாளி என்ற நிலையில் இருந்து படைப்பாளியாக மிளிர்கிறான். அந்த உணர்வு தான் அவனை மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகிறது. உழவுக்கு மட்டும் அல்ல வாழ்வுக்கும் அப்படித்தான். நாம் தேடிப் படைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் மிக விரும்பி, அதற்காக பாடுபட்டு பின் அந்தப் படைப்பு முழுமைபெற்று மிளிரும்பொழுதில் அடையும் மன நிறைவு ஈடில்லாதது. மாறாக நாம் வெகு காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று, கனிந்து வரும் போது,  நம் எதிர்பார்ப்புக்கு நேரெதிராக, ஒரு கணத்தில் விரும்பத்தகாத நிலைக்கு  மாறிப்போனால்,  அதனால் ஏற்படும் ஏமாற்றமும் வலியும் மிக அதீதமாகவே இருக்கும். சாதாரணமாக இருக்கும் கானகம் தீக்கொன்றை மலரும்போது, திடுமென தீப்பற்றியது போல் அழகாக மாறிவிடுகிறது. அது போலத்தான் காதலும், சாதாரண மனித வாழ்வை அழகாக மாற்றுகிறது. பருவம் தவறாமல் மலரும் காதலும் தீக்கொன்றையும் இயல்பாக நிகழ்...

ஏரோப்பிளேன் என்ஜின் முதல் ஏலக்காய் டீ வரை…

Image
  புத்தகம்: கபர்  ஆசிரியர்: கே. ஆர். மீரா  பதிப்பகம்: எதிர் வெளியீடு ஒரு இருபது வருடங்களுக்கு முந்திய நிகழ்வு இது. அப்போது தான் கம்பெனியில் சேர்ந்து சில வருடங்கள் ஆகியிருந்தது. வெளிநாட்டில் ஒரு முக்கியமான செயல்பாட்டில் ஈடுபட்டு வெற்றிகரமாக திரும்பியிருந்த நேரம். அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளனான நான், எங்க துறைக்கு தேவைக்கு மேலயே மென்பொருள் பயன்பாட்டில் பயிற்சி பெற்றிருந்தேன். ஆனா மென்பொருள் நிரல்களைப் பொறுத்தவரை ( Software Programming ) சற்றே பழமையான வழிமுறைகளைக் தான் கற்றுத் தேர்ந்து இருந்தேன். அதோட எங்க மென்பொருள் சம்பந்தமான அடிப்படை நிரல்களை எழுதுவதில் நானா தடவித் தடவி கத்துக்கிட்டிருந்தேன். அப்பல்லாம் ஜாவா, J2K அப்படீன்னு சக்கை போடு போட்டுக்கிட்டிருந்தாலும் நான் வெறும் C மற்றும் சில ஸ்கிரிப்டிங் நிரல்களை வைத்து முடிந்த அளவு சில பல வித்தைகளை செய்து அங்கே பெயர் ஈட்டியிருந்த வேளை. கையில பெரிய கத்தி இருந்தா புல் வெட்டறதுல இருந்த சவரம் செய்யறவைக்கும் எல்லாத்தையும் அத வெச்சே செஞ்சுறலாம்னு நெனைச்ச காலம். சிறு வயசு, இளங்கன்னு பயமறியாதுன்னு எங்க ராமு பெரியப்பா வழக்கமா அள்...