Posts

Showing posts with the label புத்தகம்

ஸ்ரீபிரியா கேட்ட பாடல்

Image
  எஸ் ராவின் எழுத்துக்கள் பல வருடங்களுக்கு முன்பே எனக்கு பரிச்சயமாயின. இந்தியா முழுவதும் பரவிப்படர்ந்த என் ரயில்பயணங்களில், தனிமை, கி.ரா., ரஸ்கின் பாண்ட் இவர்களோடு, மிக நெருக்கமான எழுத்தாக எனக்குப் பிடித்துப் போனதற்கு காரணம் அவர் பெரும்பாலும் எழுதிய விஷயங்களான பயணம் மற்றும் புத்தக வாசிப்பு. இது தவிர அவருடைய சிறுகதைகள் என்னை அவர் வார்த்தைகளோடு கட்டிப்போட்டு வைத்திருந்தன. அவர் எழுதிய உபபாண்டவம் தான், நான் முதன்முதலாக வாசித்த அவருடைய குறிப்பிடத்தக்க நெடும் புதினம் என்று நினைக்கிறேன். அதில் அவர் காட்டிய புனைவுலகம் என்னை பிரமிக்க வைத்தது. அதன் பிறகு அவருடைய வேறெந்த நெடும் புனைவும் அந்த பிரமிப்பை எனக்குத் தரவில்லை. அவருடைய நாவலான சஞ்சாரம் பற்றி அறிந்தவுடன், அதை படிக்க வேண்டும் என்ற தவிப்பு வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. அதற்கு காரணம் எஸ் ராவின் புதினம் என்பது மட்டுமல்ல. நாதஸ்வர கலைஞர்களை பற்றியது என்பதும் தான். இருந்த போதும், இலையில் உள்ள பிடித்தமான பதார்த்தத்தை கடைசி வரை வைத்திருந்து, இறுதியில் இருக்கையில் சாய்ந்து, கண்ணைமூடி ரசித்து உண்போமே, அதுபோலவே இந்தப் புதினத்தை இவ்வளவு வருடங்

ஆற்றோடு ஒரு பயணம்

Image
வருடம் தவறாமல் நடக்கும் காவிரிப் பிரச்சினை இங்கே மறுபடியும் துவங்கியிருக்கிறது. மாறியிருக்கும் அரசியல் அதிகாரங்களின் பின்னணியில், இது இந்த வருடம் சற்று உக்கிரமாகவவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பிரிவினை வழி அரசியல் நடத்தும் ஒரு தரப்பு அரசியல் அதிகாரம் இன்றி நிற்கும் நேரத்தில் அவர்களின் நல்வாய்ப்பாக இது அமைந்திருப்பதால், அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இது இந்நேரத்தில் முக்கியம் பெறுவது தவிர்க்க இயலாது. ஆனால் கருநாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இது தவிர பல ஆறுகள் கால காலமாக ஓடிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. இலக்கியம், திரைப்படம், கலாச்சாரம் என. அவற்றில் சில இருபக்கமும் வெளிப்படையாக வற்றி இருக்கலாம், ஆனால் அவற்றில் சுவடுகள் இன்றும் உண்டு. அப்படி ஒரு ஆறுதான் நாடகத் துறை. காவிரியின் இரு கரைகளிலும் நாடகத்துறையும் அதன் குழுக்களும் கோலோச்சிய காலமும் ஒன்று இருந்தது. சினிமா வெகுஜனத்தின் கற்பனைகளைக் கவர்ந்துகொள்ளும் காலத்திற்கு முன்பு, ஊர் ஊருக்கு சென்று முகாம் அமைத்து நாடகம் நடத்தும் குழுக்களும் அதை தேடித் தேடி ரசித்த கூட்டமும் ஒரு காலத்தில் நிஜமாகவே இருந்தது. அதில் பெற்ற புகழின் மூலம் சினி

புளிப்பு மருந்தும் ஒரு அறிவியல் புனைவும்

Image
“ சாமி… இதப்பாரு, சுக்கு மிட்டாய் மாதிரித்தா… அப்படியே கண்ண மூடிட்டு மொடக்குனு குடிச்சிரு” “இல்ல பாட்டி.. பொய் சொல்றீங்க… அது மருந்து…” “கண்ணு, இதப்பாரு, சீச்சிக்காய் மாதிரியே இருக்கும்… எடுத்து மட மடன்னு வாயிலே போட்டுரு…” “போங்க பாட்டி… சீச்சிக்காயாமா சீச்சிக்கா யி .... அது வேற எதோ வெறும் காயி… சும்மா ஆச காட்டி மோசம் பண்ணாதீங்க..” இது வழக்கமாக சிறுவயத்தில் நான் எடுக்கத்தயங்கும் மருந்தை, உணவை, இன்ன பிற வஸ்த்துக்களை என் பாட்டி என் வாயில் ஊட்ட கைக்கொள்ளும் உத்திகளும், அதற்கான எனது தற்காப்பு செயல்பாடுகளும் தான். இத்தனைக்கும், அவர் என்னிடம் பிரயோகம் செய்யும், பல நேரடி மருத்துவ மூலிகை நடவடிக்கைகளை சளைக்காமல் செயற்படுத்தும், கடமை வீரன்தான் நான். ஒரு மண்டலத்துக்கு, ( 48 நாட்களுக்கு ) விடியற்காலை வெறும் வயிற்றில் பிங் பாங் பந்து சைசில் அரைத்து உருட்டப்பட்ட வேப்பிலை உருண்டையை மோர் ஊற்றி விழுங்குவதாகட்டும், இட்டிலி மாவில் சேர்த்ததுக் கசப்பு குறைத்து உண்ண வேண்டிய முடக்கத்தான் கீரையை வெறுமனே சட்டியில் வணக்கி நேரடியாய் வாயில் போட்டு மென்று முழுங்குவதாகட்டும் ( மருந்ததோட வீரியம், 'காட்' போ

காந்தியின் பாதை

Image
காந்தியின் அடையாளங்கள், கொள்கைகள், குறியீடுகள் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று, தவறாகவும், குறுகிய நோக்கங்களுடனும் சித்தரிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அதனால் இன்றைய காலகட்டத்தில் அவரைப் பற்றிய உருவகம் மீளக் காட்சிப்படுத்துதல் அவசியமாகிறது. அவரைப் பற்றிய நிகழ்வுகளின் வழியே அவரைக் கண்டடைவதும், அதன் வழியாக அவரைப்பற்றிய புரிதலை அடைவதும் இன்றைய தேவை. அவ்வகையில் இந்தப்புத்தகம் ஒரு குறிப்பிட்ட அளவில் ஆவணமாகவே கருதலாம். அனுபவக் குறிப்பாக ஆரம்பிக்கும் இந்நூல், சில நேரங்களில், மூன்றாம் நபரின் பங்களிப்பை, செவிவழி சம்பவங்களாகக் கூறினாலும், பெரும்பாலும் அண்ணலின் கூடவே பயணித்த காகாவின் அனுபவங்களின் ஊடே செல்வதால், சம்பவங்களின் உண்மைத்தன்மைக்கு பெரிதும் சேதம் நேராமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகம் என்ற வகையில், நீதிக்கதைகள் (fables) போல் இருந்தாலும், அந்த சிறு சம்பவங்களின் வழியே அவரின் ஆளுமையும், அது உருவாகிய வழியையும் தெள்ளத்தெளிவாக படம் பிடிக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், கிலாபத் கிளர்ச்சி ஒரு முக்கியமான திருப்பு முனையாகும். அதன் தொடர்ச்சியாக, வைசிராயுடன் நிகழ்ந்த ப

உலகத்தின் ஜன்னல் கதவு

Image
  கட்டுரையோடு எனக்கு இருந்த தொடர்பு சற்று கலங்கிய ஒன்றுதான். பொதுவாக புத்தகங்கள் படிக்கும் பழக்கம், இரண்டாம் வகுப்பில் இருந்தே, என் தாத்தாவின் உதவியோடு எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்ததில் இருந்து வெகு வேகமாக வளர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் காமிசுக்களைப் படிக்க ஆரம்பித்தவன், கையில் கிடைத்ததையெல்லாம் படித்துப் பார்க்க ஆரம்பித்தேன். தாத்தா வீட்டுக்கு முன்னால் அவர் கட்டி வாடகைக்கு விட்டிருந்த நகைக்கடையில் அவர்கள் வாங்கி வைத்திருந்த வாராந்திர பத்திரிகைகளைப் படிக்கச் சென்று மெதுவாக அங்கே இருந்த நாவல்கள் வரை வேகமெடுத்தது. விடுமுறை நாட்களில், நண்பகல் அங்கே போனால், ஓரமாக ஒரு பென்ச்சில் ஓணான் போல ஒட்டிக்கொண்டு கையில் கிடைத்த பத்திரிக்கைகளையோ நாவலையோ படித்தோகொண்டிருப்பதை அனைவரும் காணலாம். ஆரம்பத்தில் புனைவுகளைப்படிக்க ஆரம்பித்த நான், வெகு சீக்கிரத்திலேயே என் வயதுக்கு மீறிய புத்தகங்களை படிப்பதாக எனக்கு மூத்தவர்கள் முணுமுக்க ஆரம்பித்தனர். இரண்டாவது மூன்றாவது படிக்கும் சிறுவன், புஷ்பா தங்கதுரை, ராஜேந்திர குமார் என்று படிப்பது சற்று அதிகம் தான் அல்லவா? அப்படி கையில் கிடைத்ததையெல்லாம் படித்து, அப்படிய

தமிழின் புதிய வெளிகள்

Image
வழக்கமான புதின வாசிப்பு அனுபவங்களில் இருந்து விலகி புதிய வகையான களங்களில், வேறு வகையான அனுபவங்களை தமிழில் பெறவேண்டும் என்றால் மொழிபெயர்ப்பையே பெரும்பாலும் நாட வேண்டி இருக்கிறது. அதைத் தவிர்த்து அப்படி நேரடியாக தமிழில் எழுதப்பட்டதாக வெளிவரும் பல புதினங்கள் சரியான கள அறிவோ, அதற்கான உழைப்போ இன்றி, வெறும் வார்த்தை விளையாட்டுக்களாலும் பல்வேறு சர்க்கஸ் வேலைகள் செய்தும் வாசிப்பவரின் கவனத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடிக் கவிழ்ந்து விடுகின்றன. அப்படியே அதில் சில, குறிப்பிட்ட அளவில் வாசிப்பவர்களின் கவனத்தைப் பெற்றாலும், அவற்றில் உள்ள போலித்தனம் சிலகாலங்களில் பல்லிளித்துவிடும். என்னதான் வாராது வந்த இலக்கியமாமணி என்ற பாசாங்கும், வாசகர் வட்ட ஜல்லி அடிப்புகள் இருந்தாலும், அந்த எழுத்துக்களின் உள்ளார்ந்த போலித்தனமும், ஆழமில்லாத பார்வையும் காலப்போக்கில் வெளுத்து விடும். அப்படி பல்வேறு புதினங்களை வாசித்து, சலிப்படைந்து, தமிழிலேயே தமிழின் வேறுபட்ட பரந்த களங்களை காணமுடியுமா என்று ஏங்கியபோது , கிருஷ்ணா நாகரத்தினம் , அந்தத் தேடலுக்கு ஒரு இலக்கும், அந்த இலக்கில் ஒரு சிறப்பான பயண அனுபவத்தையும், தனது ஆழ்ந்த