Posts

புலம்பெயர் வாழ்வு

Image
2009 மே மாதம் நான் ஜெர்மனி வந்து இறங்கிய நேரம். பணிமாற்ற நிகழ்வில் இந்தியாவை விட்டு ஜெர்மனியில் வந்து வாசிக்க ஆரம்பித்த காலம். அப்போது தமிழுலகம் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தின் நடுவே இருந்தது. ஈழத்தில் இருந்து நெஞ்சை நடுங்க வைக்கும் துயர நிகழ்வுகள் தொடர் செய்திகளாய் வந்து, ஈட்டியாய் நெஞ்சைத் துளைத்தன. இந்திய, தமிழக மற்றும் உலக அரசியல் தலைமைகளை வெறுப்புடன் பார்த்த காலகட்டம். அதுவரை தமிழகத்தில் தொலைவில் இருந்து பார்த்திருந்த நிகழ்வுகள், ஐரோப்பாவின் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் நெருக்கத்தில் கண்ணீரையும், துயரத்தையும், நெருக்கத்தில் அனுபவிக்க வைத்தது. இப்படி ஒரு துயரம் எப்போதும் இல்லை என தோன்றியது. உலகமே தமிழினத்தின் அழிவை பார்த்துக்களிப்பதாய் மனம் அலைமோதியது. ஆனால் காலமும் வாழ்வின் யதார்த்தங்களும் அதைக் கடக்க வைத்தன. இருந்தபோதும், அந்த ரணங்களின் வடுக்களும், வலிகளின் தடங்களும் மறையாமல் அவ்வப்போது வந்து அழுந்துவது மாத்திரம் நிற்கவில்லை. இந்தியாவுக்கு திரும்பிய பின்னும் அந்த அழுத்தம் இன்னும் முழுதாக விலகவில்லை. போரின் முடிவிற்கு பின்னால் மெல்ல மெல்ல யதார்த்தங்கள் விளங்க ஆரம்பித்தன. வஞ்சிக்கப்பட்ட த...

அற்புதங்களின் காலம்.

Image
  1665 வருடம், இங்கிலாந்து, குறிப்பாக இலண்டன் மாநகரம் பெரும் பேரழிவைச் சந்தித்தது. வசந்தத்தின் வருகை, Black Death என்னும் பெரும் bubonic Plague மரணத்தையும் சேர்த்தே அழைத்து வந்தது. ஒரே வாரத்தில் 7000 மக்கள் மரணித்த உச்சத்தை தொட்டது. மொத்தமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மரணக்குழியில் தள்ளப்பட்டனர். இலண்டனின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு காலியானது. ஒரு பெரும் ஊழித்தாண்டவம் ஆடி, 1666ல் மெதுவாக நின்று போனது. அப்படிப் பரவிய இந்தக் கொலைத்தொற்று ஒரு துணிச்சுருள் வழியே எயாம் ( Eyam ) என்ற ஒரு சிறு கிராமத்தைச் சென்று சேர்ந்ததது. அதன் பின், அக்கிராம மக்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொண்டு தொற்றையும், அதன் கொடுமையையும் எதிர்கொண்டு மீண்ட சரித்திரம் தான் இந்த புத்தகத்தின் முடிச்சு. சரித்திர நிகழ்வுகளையும், உண்மையில் வாழ்ந்த மனிதர்களையும், வாய்வழி கேட்ட சம்பவங்களையும் இணைத்து, தன் கற்பனையின் தூரிகையைக் கொண்டு, Geraldine Brooks படைத்த சித்திரம் தான் இந்த “Year of Wonders” என்ற புனைவு. புலிட்சர் விருது பெற்ற Geraldine Brooks, ஆஸ்திரேலியாவில் பிறந்த பத்திரிகையாளர். அவர் எழுதிய முதல் ப...
Image
  Human existence against overwhelming odds is extreme and spectacular as no where else, other than in the Arctic region. The people who live there against all odds face immense challenges that they have to cope by negotiating with elements of the nature. One important factor they have is the sled dog as a friend and Partner. Without those dogs, without their co-existence there can never be human life. The place where no plant life can be sustained, leaves no possibility for human life. Hence human is relegated to forage, hunt and find food by going far off into barren Ice. No Snowmobile, no Aircraft, no Automotive – all usual human implements of convenience – can work for men engaged in moving long distances across the Arctic region. By this, the human is going back in time, where he was not even a hunter gatherer, but as a scavenger following predators. Dogs who have a sense of things that humans are not normally gifted with, are the natural companions that help human reach his o...

நீரில் செல்லும் வாழ்வு.

Image
வாழ்வென்னும் நீரோட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் ஓடங்கள்தான். ஓரிடத்திலிருந்தே பயணிக்க ஆரம்பிக்கும் ஓடங்களில், பல, இலக்கு மாறி எங்கெங்கோ செல்கின்றன; சில எந்தக்கரையிலும் வந்தேறாமல் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுகின்றன; சில கவிழ்ந்தும் போகின்றன. வெகு சிலது மட்டுமே கரையேறி ஆசுவாசம் அடைகின்றன. இதனிடையே ஏதோ ஒரு கரையிலோ, நீரிலோ, அவை ஒன்றையொன்று எதிர்படக்கூடும்; சிறிது தூரம் சேர்ந்தும் பயணிக்கக்கூடும். ஏதோவொரு கரையில் இறுதியில் அடங்கியபின், அலகில்லாத ஒரு கணத்தில் திரும்பிப்பார்த்தால் எதுவும் மிஞ்சுவதில்லை - அவற்றின் நினைவுகளையும் , அலைபோல் அவை ஏற்படுத்திய உணர்வுகளையும் தவிர. அப்படி ஒரு ஓடத்திலேற்றி நீண்ட பயணத்தில் நம்மை அழைத்துச்செல்கிறார், மலையாளத்தின் பெரும் படைப்பாளியான M.T.V. படைப்பாளி என்பதைத்தாண்டி, அவர் ஒரு ராட்சதன் - வெறும் ராட்சதன் அல்ல, படைப்பில் ஒரு பிரும்ம ராட்சதன். சாகித்ய அகாதமி மற்றும் பல விருதுகளை அவருடைய படைப்புகள் பெற்றுள்ளன. அவருடைய மஞ்சு, இறுதி யாத்திரை போன்ற குறும்புனைவுகளையோ, அல்லது அவருடைய நாலு கட்டு , இரண்டாம் இடம் போன்ற நெடும் புனைவுகளையோ வாசித்திருந்தாலும், இந்த புத்தக...

குரு பார்வை

Image
பள்ளி கல்லூரி காலங்களில் என் நண்பன் குரு சொல்லும் விஷயம் தான் எனக்கு வேத வாக்கு… குன்னுரில் இருந்து ஆரம்பப்பள்ளி முடித்து, அதன் பின் தினமும் கோவைக்கு அன்னூரில் இருந்து பஸ்ஸில் வந்து போகும் கிராமத்தான் எனக்கு, கோவையின் நாசுக்கான நளினம் ஆரம்பத்தில் மிரட்சி அளித்தது. குன்னூர் பள்ளியில் அங்கிலோ இந்திய ஆங்கிலத்தில் உரையாடிய நிலை மாறி, ஆங்கிலத்தில் பேசினாலே நக்கலாக சிரித்துக்கொண்டே சுத்த “கோவை செந்தமிழில்” சர்வ சுதந்திரமாக வார்த்தைகளை வீசி பேசிக்கொள்ளும் மாணவர்கள் ஒருபுறம் என்றால், காஸ்மோபாலிட்டன் கிளப்பில் உலாவும் நவநாகரிக சமூக வாரிசுகள் ஒருபுறம். பக்கத்திலேயே இருந்த பாரதி வித்யா பவனில் பரத வகுப்பில் சேர்ந்த பின், ஒருநாள், ஒரத்தில் இருந்த என்னிடம் அவனாக வந்து அறிமுகப்படுத்திப் பேசிக்கொண்டான். புத்தகங்கள் தான் இருவரையும் இணைத்தது. உண்மையில் என்னை விட இரண்டு வயது இளையவனான அவனுக்கு நான் தான் இளைய சகோதரன். ஒரு புதிய புத்தகத்தை அவன் எனக்கு படிக்கச்சொல்லி பரிந்துரைப்பதே ஒரு அலாதியான நடைமுறை. நூலக அடுக்கில் இருக்கும் புத்தகத்தை கையில் எடுத்தவுடன் அதை புரட்டி முகர்ந்து பார்த்துவிட்டுத்தான் அதை அவ...

கவனமும் புரிதலும்

Image
ஒரு அதிகாலை புதிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் மைசூர் பயணம். இடையில் சிற்றுண்டிக்காக, பெங்களூரின் பெயர்பெற்ற சைவ உணவகத்தின் கிளையில் நிறுத்தினோம். அது பாரம்பரிய பொம்மைகளுக்குப் பெயர்பெற்ற ஊருக்கருகில் உள்ளது என்றபோதும், அங்கே வருபவர்கள் அனைவரும் அந்த நெடுஞ்சாலை வழி செல்லும் பயணிகளாகத்தான் இருப்பர். உணவை சொல்லிவிட்டு, காத்திருக்கும் போது அருகில் உள்ள மேசைகளில் தென்படும் முகங்களை காண்பதும், அதைவிட அவர்கள் உண்ணும் உணவுத் தட்டை கவனிப்பதும் மிக சுவாரசியம். அதையும் மீறி அது, காத்திருக்கும் நம் வயிற்றுக்கும் சற்று முன்னோட்டமாகவும் இருக்கும் என்பது ஐதீக நம்பிக்கை. அப்படி நாங்கள் உணவுக்காக காத்திருந்த போது, அருகில் ஒரு வயதான பெண்மணி பளிச்சென்று கண்ணில்பட்டார். பார்த்தவுடன் பெங்களூரின் படித்த Progressive என்று பறையடித்துக்கொள்ளும் தோற்றம் மற்றும் உடை. பக்கத்தில் தன்னோடு வந்த பெண்மணியோடு சிரித்துப் பேசிக்கொண்டே உணவுண்டு கொண்டிருந்தார். உணவு உண்டபின் உணவகத்தின் பின்னே இருந்த பொது கழிப்பகத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. முதலில் நானும் எங்கள் செல்வனும் சென்றுவிட்டு பைகளை ஏந்திக்கொண்டு என் மனைவி வருவதற்கு...