நினைவில் மறைந்துபோன தடங்கள்
ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது நிலப்பரப்பைப் பற்றிய அல்புனைவு எழுத்து என்பது அரசியல், கலாச்சார வரலாறு மற்றும் சமகால நிகழ்வுகள், நேரடி கள அனுபவங்கள் எனப் பலதளங்களில் பயணிக்க நேர்கிறது. அதனால் இப்படிப்பட்ட படைப்புகளுக்கு மாறுபட்ட, பன்முகத் திறன் கொண்ட படைப்பாளிகள் தேவைப்படுகிறனர். அதே சமயம், பலநேரங்களில் அப்படிப்பட்ட படைப்பாளிகள் அது தொட்டுச்செல்லும் எல்லா துறைகளிலும் திறன் கொண்டவர்களாக இருப்பதில்லை என்பதும் ஒரு சிக்கல். அப்படி அனைத்திலும் தேர்ந்தவர்களாக இல்லாதவர்கள் கூட சற்று தடுமாறும் ஏதோ ஒரு பரிமாணத்தை தங்கள் சுவாரசியமான கதையாடல்களால் இட்டு நிரப்பி வாசகர்களின் கவனம் சிதறாமல் தக்க வைத்துக்கொள்ளும், கெட்டிக்காரத்தனம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆலிஸ் அல்பினியா, அப்படி ஒரு கெட்டிக்காரர். அடிப்படையில் அவர் ஒரு இலக்கிய மாணவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்ற அவர், தனது இளங்கலை பட்டத்திற்கு பின் நேரடியாக இந்தியாவில் பத்திரிக்கையாளராக பணிபுரிய ஆரம்பித்தார். பிறகு தென் கிழக்கு ஆசிய வரலாற்றில் பட்டம் பெற்றிருந்தாலும், பத்திரிக்கையாளராகவே தொடர்ந்தார். அதனால் வரலாற்று பய...