Posts

Showing posts with the label வட்டார வழக்கு

என்பிலதனை வெயில் காயும்

Image
  புத்தகத்தின் பெயர்: என்பிலதனை வெயில் காயும் ஆசிரியர்: நாஞ்சில் நாடன் பதிப்பகம்: விஜயா பதிப்பகம். ஆரம்பத்தில், தான் படித்து வளர்ந்த நாஞ்சில் நாட்டை விட்டு மும்பைக்கு வேலை தேடிச் சென்று, மிக எளிமையான துவக்கத்துக்குப் பின் படிப்படியாய் வளர்ந்து, ஆரம்பித்த கம்பெனியிலேயே மேலாளராக உயர்ந்தவர் சுப்பிரமணியம் என்கின்ற நாஞ்சில் நாடன். தன்னைவளர்ந்த மண்ணின் மீதும் மொழியின் மீதும் தாளாத நேசம் கொண்டவர். முகம் தெரியாத ஊரில் எளிமையாகத் துவங்கிய அவருக்கு, அவர் பிறந்த மண்ணின் மீதான அடையாளம் மிக முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் நாஞ்சில் நாடன் என்று அடையாளப் படுத்திக் கொள்கிறாரோ என்று எனக்குத் தோன்றும். மும்பைக்கு செல்லும் தமிழர் பலர் தவறாமல் சந்திக்கும் பிரச்சினை ஒன்றுண்டு. வடநாட்டில் இருக்கும் பெயருக்குப் பின்னாலான, பின்னொட்டு தான் அது. தமிழகத்தில் இருக்கும் வரை, சில தலைமுறைக்கு முன் சுயமரியாதை சிந்தனைகளால் காணாமல் போன பின்னொட்டு, இங்கிருந்து அங்கே போன பின் அவர்களில் சிலருக்கு பிள்ளை பூச்சிக்கு கொடுக்கு முளைத்தது போல் திடீரென முளைத்து விடுவது உண்டு. அப்படி ஏதும் நெருக்கடி நாஞ்சில் நாடனு

உணர்வுகளின் முகங்கள்

Image
  பொதுவாக,மிதமான கோவை தென்றலை அனுபவித்துக்கொண்டே, ஒணத்தியாக ரெண்டு அன்னபூர்ணா சாம்பார் இட்லியை  உள்ளே தள்ளிக்கொண்டு,  ‘காங்கயம் கரூர் அல்லாம் தாண்டுனா, பூரா  வேறமாதிரி  சனங்க…’  அப்படீன்னு வேக்கானம் பேசற ஆட்களை கோவை முழுவதும் பரவலாகக்  காணலாம். அட, நான் கூட ஒரு காலத்தில் அப்படித்தாங்க இருந்தேன். அதனாலோ என்னவோ, அப்போதெல்லாம் என் மனம் தஞ்சை பயணத்தின் போது - லாலாப்பேட்டை வரும்போதே - வந்தியத்தேவனின் குதிரையிலும், மதுரை பயணத்தின்போது சுந்தரபாண்டியனின் வாள்வீச்சிலும் மூழ்கிவிடும் அபாயம் எப்போதும் இருந்ததுண்டு. அது தவிர்த்து எனக்கு நெல்லை  என்ற ஊரைப்பற்றியெல்லாம், காந்திபுரம் நெல்லை லாலா சுவீட்ஸ் தாண்டி வேறெதுவும் தெரியாது. முதன்முதலில் மணிரத்னத்தின் படத்தில் ஜொலித்த நெல்லையின் மனிதர்களும் தாமிரபரணிக் கரையின் பசுமையையும் ஒரு புது கனவுப்பிரதேசமாகவே எனக்கு அது  தென்படத்துவங்கியது. வெகு காலத்திற்குப்  பின், இணையத்தில் தமிழ் மணக்கத் துவங்கிய நாட்களில், சுகா என்பவர் யார் என்று தெரியாது. ஆனால் அவர் சொல்வனத்தில் தவழ விட்ட நெல்லை மனிதர்களுக்கும், அதன் மண் மணத்துக்கும் மயங்கியவன் நான். தாயார் சந்நிதி,

கி.ரா. என்னும் நெருக்கம்.

Image
  90 களின் இறுதியில் தில்லியில் இருந்து வேலையாக , வடநாடு முழுதும் , பயணமாகும் போது , என்னுடன் கூடவே பயணம் செய்யும் புத்தகங்களில் முதன்மையானது கி.ரா.வின் சிறுகதைகளே... மொழியறியா தேசங்களில் , முகமறியா மனிதர்களுடன் , புதுப்புது நிலப்பரப்புகளிலும் கூட , என்னோடு வசித்து , என் வேர்களுக்கு நீர் வார்த்தவை அவர் மொழியும் , அது உயிர்ப்புடன் வைத்திருந்த அந்த கரிசல் மனிதர்களுமே... அந்த அபிமானம் எனக்கு என்றுமே அவர் எழுத்துக்களுக்கு உண்டு... பிறகொரு காலத்தில் அவர் புதுவைக்கு நகர்ந்த பின் அவர் எழுத்துக்கள் , குறிப்பாக சிறுகதைகள் , மாற்றத்திற்கு உள்ளான போது , அந்த நெருக்கம் சற்றே நெகிழ்ந்த போதும் , ஒரு முறை பழகிய அந்த கரிசல் மணம் மாறவே இல்லை. தொடர்ந்து அவர் எழுத்தில் அந்த மணத்தை உலகத்தின் வேறு வேறு பகுதிகளில் இருந்த போதும் , அனுபவிப்பதும் சற்றும் குறையவில்லை. அந்த வகையில் , அவர் சிறுகதை தொகுதி ஒன்று கிண்டிலில் புதிதாக வந்தபோது , உடனே வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அவர் இலக்கிய வாழ்வின் நெடிய பரப்பில் படைத்து , வேறு வேறு கால கட்டங்களில் வந்த தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்த 40 சிறுகதைகள் இந்தத் தொகு