Posts

வாசிப்பது இன்பம்.

Image
  நூல்:   மொழிவது சுகம் - தொகுதி 1 ஆசிரியர்:   கிருஷ்ணா நாகரத்தினம் பதிப்பகம்:   நோஷன் பிரஸ் சிந்தனைகளும் , சரித்திரங்களும் , பாடல்களாகவும் கவிதைகளாகவும் , புதினங்களாகவும் காலகாலமாக கடத்தப்பட்டு வந்த தமிழ்ச் சமூகத்தில் கட்டுரைகள் மிகத் தாமதமாகவே வெளிவந்தன. அப்படி வந்த கட்டுரை என்ற வடிவத்தின் முக்கியத்துவம் , மற்றும் இடம் என்ன என்ற கேள்வி எனக்குள் சிலநேரம் தொனிப்பது உண்டு. முறையான தமிழ் இலக்கிய கல்வி இல்லாத நான் , அந்த கேள்விக்கு என் வாழ்வியல் நிகழ்வுகளில் இருந்தே புரிதலை வடித்து எடுத்துக்கொண்டேன். சிறுவயதில் என் தகப்பன் என்னைத் தன்னருகில் படுக்க வைத்து தூங்க வைக்க காதோடு மெல்லிய குரலில் பாடிய “ ஓராயிரம் பார்வையிலே” , “ என்னடி ராக்கம்மா” மற்றும் “மேரே சப்புனோன்க்கி” ஆகியவை என் நினைவோடும் , உணர்வோடும் கலந்து , எனக்கே எனக்கான ஒன்றாக இன்றும் காதுகளில் ஒலிக்கின்றன. இன்றும் அமைதியில்லாமல் தூக்கம் வராத என் இரவுகளில் , என் காதுகளில் ஐபாட் உபயத்தில் என் காதோடு கிசுகிசுத்து , தூங்க வைக்கின்றன. அதைப்போன்றவை தான் வண்ணதாசன் , கலாப்ரியா ஆகியோரின் கவிதைகள் தரும் உணர்வும். தொடர்ந்து , வளர்

நீதிக்கட்சி அரசும் அது சந்தித்த மருத்துவக் கல்வி சவால்களும்

Image
பகுதி 1: மருத்துவமும் சமஸ்கிருதமும்.   பகுதி 2:  மருத்துவத்தில் செம்மொழியும் வட்டார மொழிகளும். 1919 ல் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை தொடர்ந்து , நவம்பர் 1920 ல் மாகாண அரசமைத்த நீதிக்கட்சி , பல்வேறு சவால்களை சந்தித்தது. இருந்தபோதும் அது முன்னெடுத்த பல நடவடிக்கைகளின் தாக்கம் இன்றும் தொடர்ந்து , ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பது அதன் சிறப்புக்கு சான்றாகும்.   ஆனால் , ஆட்சி செய்தகாலங்களில் அது சந்தித்த   சவால்கள் வெளியில் இருந்து மட்டும் வரவில்லை. அவர்களுக்குள்ளேயே இருந்த முரண்களும் புதிய பிரச்சனைகளுக்கு காரணமாகின.   மருத்துவ துறையைப் பொறுத்தவரை மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் , பொது மருத்துவ சேவையை மாகாண அரசின் நேரடிப் பொறுப்புக்கு கொண்டுவந்தது. மருத்துவ கல்வியும் , மருத்துவ வசதியும் , மாகாண அரசின் அதிகாரத்துக்குள் கொண்டுவந்ததுடன் , மருத்துவ கல்லூரிகளும் , புதிய பாடத்திட்டங்களும் , பல புதிய மருத்துவமனைகளும் மலர அது வழிவகுத்தது.   அதே சமயம் , ஒத்துழையாமை இயக்கமும் , சுதேசி இயக்கமும் நாடு முழுவதும் பேரலையை ஏற்படுத்திவந்தன.   அதற்கு , மதராஸ் மாகாணமும்