Posts

Showing posts from May, 2023

A dark night in a society that lost its mind

Image
As a child I used to wet the bed at night - especially on those days I used to watch scary movies. I distinctly remember a black and white English movie that I was extremely disturbed. This was a movie in which normal people are shown to lose their mind suddenly and are driven to murder someone without realising what they are doing. After the incident, they seemed to have no recollection of it at all. It is later revealed that a villain is responsible for their behaviour. He would hypnotise the victims and drill the murder instruction into their subconscious mind. He would then give them a signal to trigger the action at a particular time of his choosing. There were different signals for different victims. Although there are always such mystery stories that captivate the mind, often real life events seem much more dramatic and impactful. In reality, those subconscious directives are already etched deep into our minds wired in as deep-rooted hatred based on race, religion, religion, lan

சமூகத்தின் மனப்பிறழ்வு

Image
  சிறுவயதில் எனக்கு இரவில் படுக்கையை நனைத்துவிடும் பழக்கம் இருந்தது. குறிப்பாக பயம் தரும் படங்களைப் பார்த்த நாட்களில்.  அப்போது நான் பார்த்து பயந்த ஒரு கருப்பு வெள்ளை ஆங்கிலப்  படம் ஒன்று சமீபத்தில் ஞாபகத்தில் வந்ததது. அதில் மிக நார்மலாக இருக்கும் மனிதர்கள் திடீர் என்று உணர்வு தப்பி என்ன செய்கின்றோம் என்று தெரியாமல், கொலை செய்யத் தூண்டப்படுவார்கள். அந்த சம்பவம் நடந்த பின் அவர்களுக்கு அதைப்பற்றி எந்தவொரு  ஞாபகமும் இருக்காது. அவர்கள் அப்படி நடப்பதற்கு ஒரு ஹிப்னாட்டிசம் தெரிந்த வில்லன் தான் காரணம் என்று பிறகு தெரிய வரும். அவன் கொலைச்  செயலை நிகழ்த்த வேண்டிய ஆட்களை ஹிப்னாட்டிஸத்தில் ஆழ்த்தி, அவர்கள்  ஆழ்மனதில் கொலைக்கான உத்தரவை பதிய வைத்துவிடுவான்.  பிறகு, வேறு ஒரு தருணத்தில் அந்த உத்தரவை தூண்ட ஒரு சமிக்ஞையை கொடுத்து அவர்களை செயல்பட வைத்திருப்பான். ஒவ்வொருவருக்கும் வேறு வேறு சமிக்ஞைகள். இது ஒரு மர்மக் கதை என்றாலும், நம் நிகழ் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் இதற்கு சற்றும் குறைந்தவை அல்ல. என்ன, அந்த ஆழ்மன உத்தரவுகள், ஏற்கனவே இனம், மதம், மதம், மொழி என்று ஆழ்மனத்தில் வெறுப்பெனும் வேர் கொண்டு

காதல் மலை…

Image
  சிறுவயதிலேயே மலைகள் என்னை நானறியாமலே தங்களோடு பிணைத்து வைத்துக் கொண்டன. வளரும் பருவத்தில் சிலகாலம் என்னைத் தன்னோடு வைத்துத் தாலாட்டிய நீலகிரி, நான் அதை விட்டு கீழிறங்கிய போதும், அது என்னை விட்டுக் கீழிறங்கவில்லை என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால், பிறகெப்போதும் என் கனவுகளிலும், நான் சோர்வடைந்து கொழுகொம்பு தேடிய பொழுதுகளிலும், அதன் நினைவுகளும், வடிவங்களும் என்னை முன்னோக்கி உந்தித் தள்ளியபடியே இருந்தன. என் பயணங்கள், என் வாசிப்புகள், நான் தேடித் தேடிக் காட்சிப்படுத்திய புகைப்படங்கள் என அனைத்திலும் அது தன் இருப்பை எப்போதும் உறுதி செய்து கொண்டே இருந்தது. ரஸ்கின் பாண்டும், பொற்றேக்காடும், ஏன் சமீபத்தில் M.T. வாசுதேவன் நாயரும் என் வாசிப்பின் மூலம் என்னை ஈர்த்து வைத்துக்கொண்டதும் அப்படித் தான். அந்த புத்தகங்களில் எல்லாம் மலை ஒரு பாத்திரமாகவே உலவி வருவதைப் படித்திருக்கிறேன்.அந்த வாசிப்புதான் என் அலைக்களிப்புகளில் இருந்து என்னை மீட்டு, சமணப்படுத்தி, விசாலமாக்கியது. அப்படி தேடி கையிலெடுத்த புத்தகம் தான் சார்ல்ஸ் பிரேசியர் (Charles Frazier) எழுதிய கோல்ட் மவுண்டன் ( Cold Mountain ) என்ற