Posts

Showing posts from May, 2025

மரபும் சிந்தனையும்

Image
  ஒரு படைப்பு என்பது எதனால் வாசகனுக்கு நெருக்கமாகிறது? மொழியா? இல்லை கதைசொல்லும் பாங்கா? இல்லை கதையின் பாத்திரப்படைப்பா? இல்லை சொல்லவரும் கருத்தா? வாசிப்பவரின் ரசனைக்கு நெருக்கமானவை மொழி, கதைசொல்லும் பாங்கு மற்றும் அதில் உலவவிடப்பட்ட பாத்திரங்கள் ஆகியவை. இவை அனைத்தையும் கொண்டு தான் படைப்பாளி தன் கருத்தை, அதை உருவாக்கிய சித்தாந்தத்தை, வாசகனிடம் கடத்துகிறான். பொதுவாக வாசகர்களின் ரசனைக்கு, அதன் தேடலுக்கு, ஒரு சிறந்த படைப்பாளி படையலிடும் விஷயங்கள் உச்சத்தையும் பிரமிப்பையும் அளிக்கும். அரிதாகவே சில வாசகர்களுக்கு மட்டும் சில நேரங்களில், அந்த அனுபவதில் திளைத்துக்கொண்திருக்கும் போதே அதைத்தாண்டி, படைப்பாளியின் அடிப்படைக் கருத்தாக்கம் என்ன என்ற கேள்வி எழும். அதுதான் படைப்பாளியும் அவன் வாசகனும் உரையாடும் கணம். S.L. பைரப்பா கன்னடத்தின் மிக முக்கியமான படைப்பாளி. அவருடைய பல படைப்புகள் பரந்த வாசிப்பும் கவனமும் பெற்றவை. அவருடைய இந்த "வம்ச விருட்சம்" கன்னட சாகித்ய அகாதெமி விருது பெற்று பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பெரிதும் வாசிக்கப்பட்டுள்ளது. அவருடைய பல நாவல்கள் ஏற்கனவே தமிழில் மொழிபெய...

போரின் உண்மை முகம்

Image
  ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸின் தனிமையான ஒரு மலைக்கிராமம் அது. இரண்டாம் உலக போருக்குப் பின்னான சூழல். அப்போது அந்தப் பகுதிக்கு தலைமையேற்க வரும் நேச நாட்டு படைகளைச்சேர்ந்த பிரிட்டிஷ் மேஜரின் ஜீப் ஓட்டுனரை, அந்த மலைப்பாதையில் வைத்து, சரணடைந்த ஆஸ்திரியப் படைப் பிரிவின் அடையாளம் தெரியாத வீரன் ஒருவன், மர்மமான முறையில் சுட்டுக்கொல்கிறான். தப்பித்துப்போன அவனைத் தேடும் ஒரு தேடலில் பரபரப்பாக ஆரம்பிக்கும் கதை. கச்சிதமான Alastair Maclean நாவலின் துவக்கம். அதே மொழியாளுமை. ஆனால் “The second victory” என்ற இந்தக் கதையின் அடிப்படைக் கரு அதுவல்ல. காரணம் இதை எழுதியது, Morris West. Morris ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே செயின்ட் கில்டாவில் பிறந்தவர். இளவயதிலேயே தனது தனிப்பட்ட வாழ்வின் சிக்கலில் இருந்து விடுபட ஒரு கத்தோலிக்க திருச்சபையின் அமைப்பில் சேர்ந்தவர். வளர்ந்த பின் அதிலிருந்து அவர் விலகி வந்தாலும், அவருடைய எழுத்தில் விவிலிய மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் நிழல் எப்போதும் படிந்தே இருந்திருக்கிறது. பரபரப்பாக ஆரம்பிக்கும் அவருடைய நாவல்கள், மனித மனத்தின் அடிப்படைச்சிக்கல்கள், அதனால் ஏற்படும் வ...