Posts

Showing posts from November, 2025

குரு பார்வை

Image
பள்ளி கல்லூரி காலங்களில் என் நண்பன் குரு சொல்லும் விஷயம் தான் எனக்கு வேத வாக்கு… குன்னுரில் இருந்து ஆரம்பப்பள்ளி முடித்து, அதன் பின் தினமும் கோவைக்கு அன்னூரில் இருந்து பஸ்ஸில் வந்து போகும் கிராமத்தான் எனக்கு, கோவையின் நாசுக்கான நளினம் ஆரம்பத்தில் மிரட்சி அளித்தது. குன்னூர் பள்ளியில் அங்கிலோ இந்திய ஆங்கிலத்தில் உரையாடிய நிலை மாறி, ஆங்கிலத்தில் பேசினாலே நக்கலாக சிரித்துக்கொண்டே சுத்த “கோவை செந்தமிழில்” சர்வ சுதந்திரமாக வார்த்தைகளை வீசி பேசிக்கொள்ளும் மாணவர்கள் ஒருபுறம் என்றால், காஸ்மோபாலிட்டன் கிளப்பில் உலாவும் நவநாகரிக சமூக வாரிசுகள் ஒருபுறம். பக்கத்திலேயே இருந்த பாரதி வித்யா பவனில் பரத வகுப்பில் சேர்ந்த பின், ஒருநாள், ஒரத்தில் இருந்த என்னிடம் அவனாக வந்து அறிமுகப்படுத்திப் பேசிக்கொண்டான். புத்தகங்கள் தான் இருவரையும் இணைத்தது. உண்மையில் என்னை விட இரண்டு வயது இளையவனான அவனுக்கு நான் தான் இளைய சகோதரன். ஒரு புதிய புத்தகத்தை அவன் எனக்கு படிக்கச்சொல்லி பரிந்துரைப்பதே ஒரு அலாதியான நடைமுறை. நூலக அடுக்கில் இருக்கும் புத்தகத்தை கையில் எடுத்தவுடன் அதை புரட்டி முகர்ந்து பார்த்துவிட்டுத்தான் அதை அவ...

கவனமும் புரிதலும்

Image
ஒரு அதிகாலை புதிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் மைசூர் பயணம். இடையில் சிற்றுண்டிக்காக, பெங்களூரின் பெயர்பெற்ற சைவ உணவகத்தின் கிளையில் நிறுத்தினோம். அது பாரம்பரிய பொம்மைகளுக்குப் பெயர்பெற்ற ஊருக்கருகில் உள்ளது என்றபோதும், அங்கே வருபவர்கள் அனைவரும் அந்த நெடுஞ்சாலை வழி செல்லும் பயணிகளாகத்தான் இருப்பர். உணவை சொல்லிவிட்டு, காத்திருக்கும் போது அருகில் உள்ள மேசைகளில் தென்படும் முகங்களை காண்பதும், அதைவிட அவர்கள் உண்ணும் உணவுத் தட்டை கவனிப்பதும் மிக சுவாரசியம். அதையும் மீறி அது, காத்திருக்கும் நம் வயிற்றுக்கும் சற்று முன்னோட்டமாகவும் இருக்கும் என்பது ஐதீக நம்பிக்கை. அப்படி நாங்கள் உணவுக்காக காத்திருந்த போது, அருகில் ஒரு வயதான பெண்மணி பளிச்சென்று கண்ணில்பட்டார். பார்த்தவுடன் பெங்களூரின் படித்த Progressive என்று பறையடித்துக்கொள்ளும் தோற்றம் மற்றும் உடை. பக்கத்தில் தன்னோடு வந்த பெண்மணியோடு சிரித்துப் பேசிக்கொண்டே உணவுண்டு கொண்டிருந்தார். உணவு உண்டபின் உணவகத்தின் பின்னே இருந்த பொது கழிப்பகத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. முதலில் நானும் எங்கள் செல்வனும் சென்றுவிட்டு பைகளை ஏந்திக்கொண்டு என் மனைவி வருவதற்கு...