Posts

The time of the Tiger

Image
  I have just managed to escape from a jungle in the east Thailand.. How did this happen? How did I end up there? This must be due to a book I bought while on a recent trip. As I usually do in every trip, this time also, I visited a bookstore in the town, eager to find a book that is at the top of the booklist there. Noticing my desperation, the shop assistant offered a book. This was the “The Understory” written by a Thai writer named Saneh Sangsuk. He is a leading fiction writer in Thailand. He has also managed to win remarkable awards in Thai and Global literary circles. However, his writings are only now being published in English. This book has been translated to English from Thai by a Mui Poopoksakul. Mui is a lawyer living in Berlin. She has translated several selected works of major contemporary Thai writers into English. This translation of hers, manages to convey the original emotions without being overpowering. Despite the British English accent, it is very easy and comf...

புலிகளின் காலங்கள்

Image
ஒரு அடர் கானகத்தில் இருந்து இப்போது தான் மீண்டு வந்திருக்கிறேன். இதுவரை நான் பார்த்தேயிராத தாய்லாந்தின் கிழக்குப் பகுதி காட்டிலிருந்து தப்பி வெளியே வந்திருக்கிறேன். எப்படி நேர்ந்தது இது? ஒரு தொழில் முறை பயணமாக சென்றபோது கண்டெடுத்த ஒரு புத்தகத்திலிருந்து தான் இந்த நிகழ்ந்திருக்க வேண்டும். வழக்கமாக செய்வது போலவே இந்த முறையும் அந்த ஊரில் உள்ள ஒரு புத்தகக்கடைக்கு சென்று அங்கே என்ன புத்தகம் இப்போது மிகவும் வாசிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது என்று அறியும் ஆவலோடு சென்றேன். அப்போது அங்கிருந்த கடைச் சிப்பந்தி எனக்காக தேர்ந்தெடுத்துக் கொடுத்த புத்தகம் தான் இது. இதை எழுதியவர் சனே சங்சுக் (Saneh Sangsuk) எனப்படும் ஒரு தாய்லாந்து எழுத்தாளர். தாய்லந்தின் குறிப்பிடத்தக்க முன்னணி புனைவு எழுத்தாளர் இவர். அந்த நிலத்தின் முக்கிய கதை சொல்லியான சனே, அவர்களின் கலாச்சாரத்தையும் சரித்திரத்தையும் குறியீடாக வைத்து தன் எழுத்துகளில் மாயவித்தையை நிகழ்த்திக் காட்டும் வித்தைக்காரர். தற்கால தாய் இலக்கிய பரப்பிலும், உலக இலக்கிய பரப்பிலும் பல விருதுகளைப் பெற்றவர். ஆனாலும் அவருடைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் வருவது இ...

A revealing View

Image
Robert Seethaler is an Austrian writer I discovered in one of my recent trips. While browsing books from the curated list in a German Airport Book store, ( Which I do every time when I go to a new city or Country ) I was immediately hooked by the Simple story line. I immediately filed this in my to list. Soon after returning, I started reading his "The Tobacconist" on my Kindle when I realized that I had bought this book sometime back and had not read it yet. From the start, the images those simple lines evoked were magical. The Translation by Charlotte Collins is so refreshingly smooth. It has managed to catch all the "Austro-German" Nuances that oozes out of Seethaler's narration. The Language and the images it evoke, sometimes Funny, sometimes Poignant, is very strong and dazzling. If you want to read a fine, Nuanced international literary work in recent times without much of exertion, I would strongly recommend you this book. In 240+ pages, this is a beautif...

விளிம்பில் நடக்கும் வரிகள்

Image
  என் சமீபத்திய பயணம் ஒன்றில், ஒரு விமான நிலைய புத்தகக் கடையில் தான் ராபர்ட் சீதாலர் ( Robert Seethaler) என்னும் ஆஸ்திரிய எழுத்தாளர் எனக்கு அறிமுகமானார். நான் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய இடத்திற்குச் செல்லும்போது, அந்த நகரின் புத்தகக்கடைக்கு சென்று அங்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களை புரட்டி, புதிதான வாசிப்புக்கு அச்சாரம் போடுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன். அப்படித்தான் அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பை அங்கே கண்டெடுத்தேன். அப்படிப் புரட்டிய புத்தகத்தில், ​​அதன் எளிமையான வரிகளும் அதன் உருவகங்களும் மனதிற்குள் ஆணியடித்து சட்டமாகவே அமர்ந்துவிட்டன. வேறு ஒரு நெடும் புதினத்தின் வாசிப்பின் இடையே, இளைப்பாற, வேறொரு புத்தகத்தை தேடியபோது, கிண்டிலில் வாங்கி வைத்திருந்த அவரது "தி டொபாகோனிஸ்ட்" ( The Tobacconist / Der Trafikant ) என்ற புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். தொடக்கத்திலிருந்தே, அந்த எளிய வரிகள், அவை கண்முன் நிறுத்திய காட்சிகள் என்று அனைத்தும் பட்டென்று மனதில் சென்று ஒட்டிக்கொண்டன. அதற்குக் காரணம், சார்லோட் காலின்ஸ் (Charlotte Collins) மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு என்பது ஒரு சிறந...

நினைவில் மறைந்துபோன தடங்கள்

Image
ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது நிலப்பரப்பைப் பற்றிய அல்புனைவு எழுத்து என்பது அரசியல், கலாச்சார வரலாறு மற்றும் சமகால நிகழ்வுகள், நேரடி கள அனுபவங்கள் எனப் பலதளங்களில் பயணிக்க நேர்கிறது. அதனால் இப்படிப்பட்ட படைப்புகளுக்கு மாறுபட்ட, பன்முகத் திறன் கொண்ட படைப்பாளிகள் தேவைப்படுகிறனர். அதே சமயம், பலநேரங்களில் அப்படிப்பட்ட படைப்பாளிகள் அது தொட்டுச்செல்லும் எல்லா துறைகளிலும் திறன் கொண்டவர்களாக இருப்பதில்லை என்பதும் ஒரு சிக்கல். அப்படி அனைத்திலும் தேர்ந்தவர்களாக இல்லாதவர்கள் கூட சற்று தடுமாறும் ஏதோ ஒரு பரிமாணத்தை தங்கள் சுவாரசியமான கதையாடல்களால் இட்டு நிரப்பி வாசகர்களின் கவனம் சிதறாமல் தக்க வைத்துக்கொள்ளும், கெட்டிக்காரத்தனம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆலிஸ் அல்பினியா, அப்படி ஒரு கெட்டிக்காரர். அடிப்படையில் அவர் ஒரு இலக்கிய மாணவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்ற அவர், தனது இளங்கலை பட்டத்திற்கு பின் நேரடியாக இந்தியாவில் பத்திரிக்கையாளராக பணிபுரிய ஆரம்பித்தார். பிறகு தென் கிழக்கு ஆசிய வரலாற்றில் பட்டம் பெற்றிருந்தாலும், பத்திரிக்கையாளராகவே தொடர்ந்தார். அதனால் வரலாற்று பய...

மரபும் சிந்தனையும்

Image
  ஒரு படைப்பு என்பது எதனால் வாசகனுக்கு நெருக்கமாகிறது? மொழியா? இல்லை கதைசொல்லும் பாங்கா? இல்லை கதையின் பாத்திரப்படைப்பா? இல்லை சொல்லவரும் கருத்தா? வாசிப்பவரின் ரசனைக்கு நெருக்கமானவை மொழி, கதைசொல்லும் பாங்கு மற்றும் அதில் உலவவிடப்பட்ட பாத்திரங்கள் ஆகியவை. இவை அனைத்தையும் கொண்டு தான் படைப்பாளி தன் கருத்தை, அதை உருவாக்கிய சித்தாந்தத்தை, வாசகனிடம் கடத்துகிறான். பொதுவாக வாசகர்களின் ரசனைக்கு, அதன் தேடலுக்கு, ஒரு சிறந்த படைப்பாளி படையலிடும் விஷயங்கள் உச்சத்தையும் பிரமிப்பையும் அளிக்கும். அரிதாகவே சில வாசகர்களுக்கு மட்டும் சில நேரங்களில், அந்த அனுபவதில் திளைத்துக்கொண்திருக்கும் போதே அதைத்தாண்டி, படைப்பாளியின் அடிப்படைக் கருத்தாக்கம் என்ன என்ற கேள்வி எழும். அதுதான் படைப்பாளியும் அவன் வாசகனும் உரையாடும் கணம். S.L. பைரப்பா கன்னடத்தின் மிக முக்கியமான படைப்பாளி. அவருடைய பல படைப்புகள் பரந்த வாசிப்பும் கவனமும் பெற்றவை. அவருடைய இந்த "வம்ச விருட்சம்" கன்னட சாகித்ய அகாதெமி விருது பெற்று பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பெரிதும் வாசிக்கப்பட்டுள்ளது. அவருடைய பல நாவல்கள் ஏற்கனவே தமிழில் மொழிபெய...

போரின் உண்மை முகம்

Image
  ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸின் தனிமையான ஒரு மலைக்கிராமம் அது. இரண்டாம் உலக போருக்குப் பின்னான சூழல். அப்போது அந்தப் பகுதிக்கு தலைமையேற்க வரும் நேச நாட்டு படைகளைச்சேர்ந்த பிரிட்டிஷ் மேஜரின் ஜீப் ஓட்டுனரை, அந்த மலைப்பாதையில் வைத்து, சரணடைந்த ஆஸ்திரியப் படைப் பிரிவின் அடையாளம் தெரியாத வீரன் ஒருவன், மர்மமான முறையில் சுட்டுக்கொல்கிறான். தப்பித்துப்போன அவனைத் தேடும் ஒரு தேடலில் பரபரப்பாக ஆரம்பிக்கும் கதை. கச்சிதமான Alastair Maclean நாவலின் துவக்கம். அதே மொழியாளுமை. ஆனால் “The second victory” என்ற இந்தக் கதையின் அடிப்படைக் கரு அதுவல்ல. காரணம் இதை எழுதியது, Morris West. Morris ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே செயின்ட் கில்டாவில் பிறந்தவர். இளவயதிலேயே தனது தனிப்பட்ட வாழ்வின் சிக்கலில் இருந்து விடுபட ஒரு கத்தோலிக்க திருச்சபையின் அமைப்பில் சேர்ந்தவர். வளர்ந்த பின் அதிலிருந்து அவர் விலகி வந்தாலும், அவருடைய எழுத்தில் விவிலிய மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் நிழல் எப்போதும் படிந்தே இருந்திருக்கிறது. பரபரப்பாக ஆரம்பிக்கும் அவருடைய நாவல்கள், மனித மனத்தின் அடிப்படைச்சிக்கல்கள், அதனால் ஏற்படும் வ...