Posts

தொலைந்து போன வார்த்தைகள்

Image
  ஒரு கடல் இரு நிலம், ஆங்கிலத்தில் By the sea என்று அப்துல்ரஸாக் குர்னா எழுதிய அழகிய நாவல். குர்னாவை பற்றி புதிதாக சொல்ல ஏதும் இல்லை.ஏற்கனவே அவருடைய இரு நூல்களை வாசித்த அனுபவம் மிக அருமை. அவர் நோபல் பரிசு பெற்றதற்கு முன்பு வெளிவந்த நாவல் இது. அகதியாக குடியேறிய அவர் மனதுக்கு மிக நெருக்கமானதாக இந்த நூல் இருந்திருக்கவேண்டும். நோபல் பரிசின் இணைய காணொளியில் அவர் தேர்ந்தெடுத்து வாசித்தது இந்த புத்தகத்தின் பக்கங்களைத்தான். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் சசிகலா பாபு. இவருடைய பத்தாவது மொழி பெயர்ப்பு இது. அந்த அனுபவம் இதில் தெரிகிறது. இவர் மொழிபெயர்த்த ஒரிய எழுத்தாளர் கோபிநாத் மோகந்தியின் மொழிபெயர்ப்பான சோற்றுப்பாடு என் வாசிப்பு பட்டியலில் உள்ளது.  “மேஜையைச் சுற்றி அமர்ந்து நாங்கள் தேநீர் பருகினோம். ஹாம் துண்டுகளைக் கைகாட்டி வேண்டாமென நான் சிலியாவிடம் தலையாட்டினேன். “பன்றி” காதுவரை இளித்துக்கொண்டுச் சொன்னான் இப்ராகிம், அந்த கேலியை ஜார்ஜியிடமும் சொல்லத் திரும்பினான். “முஸ்லிம் இல்லையா, பன்றியிறைச்சி சாப்பிட மாட்டார், மூத்திரத்தில் சாராயவாடை இருக்காது. சுத்தம் சுத்தம் சுத்தம், கழுவு கழுவு கழுவு. கருப

சொர்க்கத்தின் பறவைகள் - வாழ்வின் ஓட்டம்

Image
  நம் தலைமுறை போல் கால மாற்றத்தை மிகப்பெரிய அளவில் நேரடியாக உணர்ந்த தலைமுறை இருந்திருக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு நடுவில் பாந்தமாக வைத்திருக்கும் ஒரு பெரிய பெட்டியை பதவிசாக அதன் மெல்லிய உறை விலக்கி, அதன் உருளைகளை மிக கவனமாக திருப்பி, சிலோனிலோ, சென்னையிலோ இருந்து ஒலிக்கும் பாடல்களை நிம்மதிப் பெருமூச்சு எழ கேட்பதையும், கனமான கருப்பு வஸ்த்துவை கையில் எடுத்து மெதுவாக எண்களை தேடிச் சுழற்றி, குரல் வந்ததும் பய பக்தியோடு வெளியூரில் இருக்கும் மாமாவின் ஊரையும் எண்ணையும் சொல்லி, காத்திருந்து ஓடிவந்து பேசுவதையும், நாமே மறந்திருக்கும் போது, அடுத்த தலைமுறை அதை நாம் சொல்லும்போது எப்படிப் புரிந்து கொள்ளும்? இதில், நமக்குப் பரிச்சயமே இல்லாத ஒரு நிலப்பரப்பில், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய அதன் சமூக அமைப்பு, அந்த சமூகங்களின் தொன்மங்கள், வாழ்வியல் ஆகியவற்றை அந்த சமூகத்தில் இருந்து வந்த ஒருவரே சொல்லுவதை நமக்கு தமிழில் கடத்துவது என்பது எவ்வளவு பெரிய முயற்சி? அப்படி ஒரு முயற்சியைத்தான், லதா அருணாச்சலம் அப்துல்ரஸாக் குர்னாவின் “சொர்க்கத்தின் பறவைகளில்” செய்திருக்கிறார். அவ

Deccan in Dazzling light

Image
What Anirudh Kanisetti has Presented in his Magnum opus, “ Lords of the Deccan” is a dramatic and sensational narration that keeps you on the edge of your seat trying to finish the book at one go. Make no mistakes, Kanisetti is no academic Historian. He is a History writer who builds a chosen narration out of historical research by others. So it is natural it comes with a POV that is built on his interpretation and supposition. In this narration, Kanisetti purports to present a view on Medieval Deccan Powers, their rise, their expansion and their sunset. The Powers he means are the Chlaukyas and Rashtragudas. Every other Dynasty is presented from the viewpoint of the above mentioned Dynasties. He also Speaks about Cholas but about that, much later. So with that in mind, he sets out to outline the Rise of Vatapi Chalukyas, and their Conquests over Pallavas. The popular narrative of Narasimha Varma Pallava taking revenge on Pulikesin II and the Sacking of Vatapi after which popular narra

பனிமூட்டத்திற்கு அப்பால்

Image
  சிலவருடங்களுக்கு முன் ஒவ்வொரு வார இறுதியிலும் நண்பர்களோடு ஒரு குறிப்பிட்ட மலையேற்றக் குழுவினருடன் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை நேரடியாக காண வெவ்வேறு பகுதிகளுக்கு மலையேற்றம் செல்வதுண்டு. அப்படி ஒரு முறை சென்ற பயணக் குழுவில் அனைத்து வயதிலும் உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் வழக்கம் போல் உற்சாகத்தோடு பெரும் அளவில் இணைந்திருந்தனர். பொதுவாக ஏறப்போகும் மலைப்பகுதியைப்பற்றி பெரும் உற்சாகம் குழு முழுவதுமே பரவலாக இருந்தது. பேசிப்பார்த்ததில் பெரும்பாலோனோர், இமயமலை பகுதிகளிலும், வ.கி. மாநிலங்களிலும் உள்ள மலைப் பகுதிகளில் மலையேற்றம் செய்வதையே தங்கள் லட்சியமாகக் கூறிக்கொள்வதை கேட்கமுடிந்தது. வெற்றிகரமாக மலையேற்றத்தை முடித்துக்கொண்டு, மறு நாள் காலையில் உணவு நேரத்தில், இயல்பாகவே சிறு சிறு குழுவாக பிரிந்து நிதானமாக உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது, ஒரு இளம் பெண், கையில் காபிக்கோப்பையுடன், எங்கள் உரையாடலில் வந்து இணைந்து கொண்டார். மெதுவாக இயற்கை, மலையோர தாவரங்கள் மற்றும் பிராணிகள், என்று சென்ற உரையாடல், வீட்டுப் பிராணிகளில் வந்து நின்றது. அப்போது வீட்டில் வளர்க்கும் நா

A peek into the mist

Image
Few Years back I was on a weekend Trekking trip with a diverse group who were all extremely passionate about nature and Mountains. All along the trip to the Starting point of the Trek from the Club, all of them Looked Exciting and always spoke about how they aspire to trek along the Lush North East mountains and Specifically about Khasi and Jaintia Hills. On the early morning after the successful completion of the trek, while we were gathered around for the Breakfast, I struck up a conversation with a Young lady who was from Bangalore and was part of the group that was very vocal about their passion about the North East. The conversation moved along the Common interest of Nature, Books, Animals and hovered around the Pets. While Sipping the Morning Coffee, Casually she mouthed out " Our Pets are not safe from the North East people who have infested the city". To say that I was shocked would have been a gross understatement. The shock must have shown in my face. So she backed

ஸ்ரீபிரியா கேட்ட பாடல்

Image
  எஸ் ராவின் எழுத்துக்கள் பல வருடங்களுக்கு முன்பே எனக்கு பரிச்சயமாயின. இந்தியா முழுவதும் பரவிப்படர்ந்த என் ரயில்பயணங்களில், தனிமை, கி.ரா., ரஸ்கின் பாண்ட் இவர்களோடு, மிக நெருக்கமான எழுத்தாக எனக்குப் பிடித்துப் போனதற்கு காரணம் அவர் பெரும்பாலும் எழுதிய விஷயங்களான பயணம் மற்றும் புத்தக வாசிப்பு. இது தவிர அவருடைய சிறுகதைகள் என்னை அவர் வார்த்தைகளோடு கட்டிப்போட்டு வைத்திருந்தன. அவர் எழுதிய உபபாண்டவம் தான், நான் முதன்முதலாக வாசித்த அவருடைய குறிப்பிடத்தக்க நெடும் புதினம் என்று நினைக்கிறேன். அதில் அவர் காட்டிய புனைவுலகம் என்னை பிரமிக்க வைத்தது. அதன் பிறகு அவருடைய வேறெந்த நெடும் புனைவும் அந்த பிரமிப்பை எனக்குத் தரவில்லை. அவருடைய நாவலான சஞ்சாரம் பற்றி அறிந்தவுடன், அதை படிக்க வேண்டும் என்ற தவிப்பு வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. அதற்கு காரணம் எஸ் ராவின் புதினம் என்பது மட்டுமல்ல. நாதஸ்வர கலைஞர்களை பற்றியது என்பதும் தான். இருந்த போதும், இலையில் உள்ள பிடித்தமான பதார்த்தத்தை கடைசி வரை வைத்திருந்து, இறுதியில் இருக்கையில் சாய்ந்து, கண்ணைமூடி ரசித்து உண்போமே, அதுபோலவே இந்தப் புதினத்தை இவ்வளவு வருடங்

பாலை மனம்

Image
என் தாத்தா, தான் பிறந்து, வளர்ந்து, பல வருடங்களாக தொழில் நடத்திய ஊரையும், தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்த ஊரின் மத்தியில் இருந்த பெரிய வீட்டையும் விட்டு, என் படிப்பிற்காக நகரின் மத்தியில் வந்து குடியேறிய சிலகாலங்களில் டேவிஸ் அண்ணன் வந்து சேர்ந்து கொண்டான். மலையாளம் கலந்த தமிழும், வியப்புகலந்த விழிகளில் எப்போதும் சிரிப்புடனும், தன் ஆட்டோவோடு வந்து எங்கள் தாத்தாவின் ஆஸ்தான சாரதியாகவும், பாட்டியின் அனைத்து வெளிவேலைகளுக்குமான கண்ணனாகவும் மிக இயல்பாக இணைந்து கொண்டான். சிவந்த நிறத்தோடு, உயரமாக, கூரிய நாசி, சுருட்டை முடியுடன், கிட்டத்தட்ட நடிகர் சுரேஷ் மேனனைப்போன்ற தோற்றத்துடன் இருந்த அவனை அப்படிப் பார்ப்பது பலருக்கு கடினமாக இருக்கும்; அவனோடு அவர்கள் பேசிப்பார்க்கும் வரை. பேசினால் மிக அப்பாவியான “யதார்த்தமான” பேச்சு அவனை அனைவருக்கும் பிடித்தவனாக மாற்றிவிடும். கேரளத்தின் நெம்மரா பக்கமிருந்து கோவைக்கு வந்து அந்நகரின் அங்கமாகிப் போனவன் அவன். சொந்த ஊரில் இருந்தே வெகு காலமாக ‘தொர முதலாளியிடம்’ இருந்து வந்த இடது, வலது கரங்களையும், துவாரபாலகர்களையும் மீறி அவரின் அன்புக்கு அவன் பாத்திரமானது அதிசயம். அ