Posts

சுதந்திரத்தின் விலை.

Image
இந்த புத்தகத்தின் ஆசிரியர், சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது பெய்ஜிங்கில் இருந்து உள் மங்கோலியாவின் மேய்ச்சல் பகுதிக்கு அனுப்பப்பட்ட மாணவர்களில் ஒருவர். அப்போது அங்கு இருந்த மேய்ச்சல் நில மங்கோலிய இன மக்களுடன் வாழ்ந்து அந்த வாழ்வை நெருக்கமாக அறிந்து கொண்டு, அதன் பாதிப்பில் எழுதிய புதினமாகும் இது .  அந்த நிலத்தின் கலாச்சாரத்தையம், மக்களையும் நேசிக்க ஆரம்பித்த அவர், அழிக்கப்பட்ட அந்த வாழ்வை மிக நுணுக்கமாகவும் நெகிழத்தக்க வகையிலும் பதிவு செய்த காரணத்தால் மிகுந்த வரவேற்பைப்பெற்ற  நூலானது. சீனாவிலும், பின் ஆசியாவிலும் மிகுந்த வரவேற்பைப்பெற்ற இந்த நூல், தமிழில், சி.மோகன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. சி.மோகன் தமிழில் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளில் ஒருவர், அதிகம் அறியப்படாதவர். அவரின் தேர்ந்தெடுத்த உலக சிறுகதைகளின் தொகுப்புகள் ஏற்கனவே பெரு வரவேற்பைப் பெற்றவை. அவரின் மொழி ஆளுமையால் இந்த நூலை அதன் கணமும், உணர்வும் சற்றும் குன்றாமல் தமிழ் வாசகர்களுக்கு ஏந்தி வழங்கியிருக்கிறார்.   தித்திக்கும்பழம் தின்னக் கொடுப்பார்; மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு; பொன்னே. மணியே, என்றுனைப் ப

Federal Agency - An Inception

Image
Just finished this.. What a thorough investigative reporting! Amazing how all the time we talk about the Holocaust, racism all in the context of Nazis and yet how much of that was lurking around on the so called "good side" is revealing. For all those who grew up reading fictional adventures from writers like Louis L'amour, making heros from the wild West, this is a rude awakening call. There were always heroic cowboys, gun toting Texas rangers, Sheriff's, fantasy characters like Tex Willer, etc. fighting the blood thirsty native Indians - always the crazy blood thirsty red Indian - in our fantasy world. This book shows the dark side of that. This is about how in early 20th century, just around the time Germany had lost the first world war and Hitler was planing his ascent, there were large scale, systematic murder of rich native Indians of Osage tribe, for gaining their share of the land and oil money by white Americans who were their friends, spouses, lawyers and ju

பிறப்பும் மறுபிறப்பும்

Image
 தொண்ணூறுகளின் மத்தியில் நான் பொறியியல் இளங்கலை முடித்து, நடுவில் ஒரு வேலையில் சேர்ந்திருந்து, பின் ஒரு இரு சக்கர விபத்தினால் வீட்டில் முடங்கி இருந்த நேரம். செய்த எதுவும் சரிவராமல், அவநம்பிக்கையின் கருத்த மேகங்கள் மெதுவாக சூழ்ந்திருந்த காலம். படுக்கையில் இருந்தாலும், விடாமல் கற்ற கல்வி சார்ந்த செயல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதி மட்டும் இருந்தது.  அப்போது கூகுள் மொழிபெயர்ப்பு வசதிகள் இல்லாத காலகட்டம். ஜப்பானிய கண்டுபிடிப்புகளின் பேடன்ட் விண்ணப்பங்கள் சம்பந்தமாக, அந்தக் கண்டுபிடிப்புகளின் சுருக்கமான விளக்கங்களை ஆங்கிலத்தில் சேர்க்க வேண்டிய தேவை இருந்தது. அதை முதல் நிலையில் தானியங்கி மொழிபெயர்ப்பு இயந்திரம் மாற்றியபின், அதைத் திரும்பப் ஒரு முறை மேனுவல் முறையில் சரியாக திருத்தி அமைக்கும் தேவை இருந்தது. அதற்கு துறை சார்ந்த அறிவு தேவை என்பதால், இந்த வேலையை அப்போது அதை செய்யத்துவங்கினேன்.  அப்போதுதான் மொழிபெயர்ப்பு என்பது வெறும் மொழி மாற்றம் மட்டும் அல்ல, அதன் உயிரோட்டமும், அர்த்தமும் மாறாமல் மொழி கடத்தும் வேலை என்பது புரிந்தது. பின்னர் வாசகனாய், பல மொழிபெயர்ப்பு புதினங்களைப் படித்தபோதும்

கானகத்தின் குரல்

Image
 நாம் காணாத கதைக்களங்கள் பல நூறு ஒளிந்திருக்கிறன, நமது பரப்பில். குரலற்றவர்களின், முகமற்றவர்களின் குரல் வழியே பல நூறு சுவாரசியமான கதைகள் கொடுக்க முடியும் என்று லட்சுமி சரவணகுமார் இங்கு உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒரு வேட்டையின் நூலிழையின் வழியே, ஒரு காட்டின் உள்ளே நம்மை உள்ளிழுத்து ஒரு வனத்தை நம் மனதினுள் விதைத்து, நீரூற்றி, உயிர் பெற வைத்தது, அதனோடு நம்மை வாழவே வைத்திருக்கிறார். கதை நடக்கும் காலம் 1980 களின் ஆரம்பகாலம்... அதன் பரவலான நிகழ்வுகளைச் சுட்டியிருந்தாலும், அவை அவரின் கதைக்குள், எந்த முக்கியமான அடிப்படையையும் பாதிக்கவில்லை. அவரின் காடு காலம் கடந்த ஒன்றாகவே இருக்கிறது, பளிச்சியைப் போல், பாட்டாவைப் போல், அவர்களை வணங்கும் பளியர்களைப் போல்... அதன் மனிதர்கள் அதிக குழப்பமின்றி மிகவும் எளிமையானவர்கள். அவர்களின் வாழ்வியல் மட்டும் அல்ல, மனதாலும். அவர்களின் கோபங்கள், தாபங்கள், கவலைகள், வன்மங்கள் எல்லாமே எளிமையாக, வெளிப்படையாக, உக்கிரமாக வெளிப்படுகிறது. வெகு ஜன வாழ்வில் நாம் சாதாரணமாக எதிர்கொள்ளும் உறவுகளின் உறுதியும், திண்மையும் இந்த மனிதர்களிடையே இல்லையென்றாலும், அந்த நெகிழ்ந்த உறவுகள

A walk in the arcane world

Image
"It would be remiss not to mention the spectre of Karl Marx" Yanis says thanking his influencers in the foreword of the book. That is an interesting way to refer to the legacy of Karl Marx as a 'Specter' coming from a close compatriot of Bernie Sanders and an evolved Marxist himself. For some one who is getting into understanding the current economics with very little understanding of nuts and bolts of it, particularly a techie like me who never had to wade through the maze of its bewildering web, this is book is a nice reckoner. I have read an historical writing on Money by Yuval Harari which was very engaging read, but had lost the way when it meandered into the  future. This book seems be picking off from that altitude and dives deeper into the arcane world of markets and debts. Initially the narration style of going along the path of fables and tales from the past, - notably from the Greek Mythology - finding parallels to explain the layman reader about the comple

ஊழல் ஒழிப்பு வீரர்களும், அவர்களின் சாகச கதைகளும்...

Image
  பொதுவாக தேர்தலுக்குத் தேர்தல், ஊழல் ஒழிப்பு நாயகர்களும் அவர்களின் ஊழல் ஒழிப்பு கோஷங்களும் நம் மக்கள் முன் வைக்கப்படுவதும், அதைத் தொடர்ந்து,  தீவிரமாக மக்களின் தேர்தல் நேர கனவுகளை தூண்டுவதும் நிகழ்ந்தே வந்திருக்கிறது.  தேசிய அளவில் சில கால கட்டங்களில் அவை   எழுப்பப்பட்டு மக்களும்  அதற்கு செவி சாய்த்து, ஆதரவளித்ததும் பிறகு ஏமாந்தததும் நமது சரித்திரத்தில் இடம் பிடித்தே இருக்கிறது. உதாரணமாக, அண்ணா ஹசாரே எழுப்பிய எழுச்சி இதற்கு ஒரு சமீப கால நிகழ்வு. இதில் பெருமளவில் ஈர்க்கப்படுவது நகர்மய நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினர் தான்.  பத்திரிக்கைகளை பொறுத்தவரை, அவர்களின் பசிக்கு கிடைத்த தீனி என்று, அவர்கள் அதை பரவலான உணர்வாக சித்தரித்து, அதை படிக்கும் மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் கண்களை கவர்ந்து கொண்டு, வருமானத்தை அதில் ஈட்டிக்கொள்கின்றன. உண்மையில் நமது சமூகம் மட்டுமல்ல, வேறு பல சமூகங்களிலும் ஊழல் என்பது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் விளங்கியே வந்திருக்கிறது. நமது நாட்டை பொறுத்தவரை, பழங்கால அரசர் காலம் முதல் தற்கால ஆட்சியாளர்கள் வரை பல்வேறு அளவுகளில் அது படர்ந்தே வந்திருக்கின்றது. மே

மாரி ஆயியும் மாட்டுக்கறியும்.

Image
  பொதுவாக சாதி அடையாளமற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் மேல்தட்டு மனிதர்கள்,  “ நான் சாதியெல்லாம் பார்க்கறது இல்ல சார்… நான் என் நண்பர்களை சாதி பார்க்காம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சேர்ந்து சாப்பிடுவேன் தெரியுமா?” என்று கூறுவதை அடிக்கடி நாம்  கேட்டிருக்கலாம். இந்த வார்த்தைகளில் ஒலிக்கும், போலித்தனம், மேட்டிமைத்தனம் மற்றும் மறைமுகமான சாதீயம், வெளிப்படையாக கேட்கப்படாத ஒரு கேள்வியில் ஒளிந்திருக்கிறது. “என்றாவது அதே கீழ்சாதி நண்பரின் வீட்டிற்கு சென்று அவர் உணவைப் பகிர்ந்து உண்டு இருக்கிறீர்களா?” என்பதே அந்தக் கேள்வி. அந்தக் கேள்விக்குப் பதில், பெரும்பாலும்   மௌனமாகவே இருக்கும்.   மறைந்திருக்கும் சாதீயம் வெளிப்படும் தருணம் அது. இது போன்ற உரையாடல்கள் எப்போதும் ஒரு வழிப்பாதையானவை.  அது எப்போதும் மேல் சாதியின்  உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றி மட்டுமே பேசுமே தவிர தாழ்த்தப்பட்டவர்களின் உணவுப் பழக்கங்களை அல்ல. சில  நாட்களுக்கு முன், சமூக வலைதளத்தில் ஒரு புத்தகத்தின் சுட்டி ஒன்று கிடைத்தது. அதைப் படிக்கும் போது  எழுந்த எண்ணங்கள்தான் மேலே சொன்னவை.  அது, ஒரு வித்தியாசமான நூல்.  விற்பனையில் இல்லாத, “இத